மது விற்றவர் கைது

மது விற்றவர் கைது

கைது

வந்தவாசி அருகே மது விற்பனை செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம்,வந்தவாசி அடுத்த கீழ்கொடுங்காலூர் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மது விற்பனை செய்த காஞ்சீபுரம் மாவட்டம் உத்தரமேரூர் தாலுகா குப்பையாநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த வினோத்குமார் (வயது 32) என்பவரை போலீசார் கைது செய்தனர். இதனையடுத்து அவரிடமிருந்து 144 மதுபாட்டில்கள் மற்றும் மொபட்டை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story