முசிறியில் மது விற்றவர் கைது

முசிறியில் மது விற்றவர் கைது

பைல் படம்

முசிறியில் அத்துமீறி மது விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
திருச்சி மாவட்டம். முசிறி சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சதாசிவம் தனது குழுவினருடன் பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். அய்யம்பாளையம் காவிரி ஆறு பகுதியில் ஆய்வு மேற்கொண்ட போது பெற்றோர் சத்திரம் பகுதியைச் சேர்ந்த சேகர் ( 57 ) என்பவர் சட்டவிரோதமாக அரசு மதுபானங்களை விற்பதை கண்டுபிடித்தார். இதையடுத்து அவரை கைது செய்தார். அவரிடமிருந்து மது பாட்டில்களை பறிமுதல் செய்தார். அவர் மீது வழக்குப்பதிந்து விசாரணை செய்து வருகிறார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags

Next Story