சீங்கோட்டை கிராமத்தில் மது விற்பனை செய்தவர் கைது

சீங்கோட்டை கிராமத்தில் மது விற்பனை செய்தவர் கைது

கைது செய்யப்பட்ட முதியவர்

சீங்கோட்டை கிராமத்தில் மது விற்பனை செய்தவர் கைது செய்யப்பட்டார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி வட்டம் சீங்கோட்டை பகுதியில் மகாவீர் ஜெயந்தி முன்னிட்டு அனைத்து டாஸ்மாக் கடைகளும் தமிழக முழுவதும் விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் அரசு மதுபானங்களை வீட்டில் பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பதாக காவல்துறைக்கு கிடைத்த ரகசிய தகவலை யடுத்து அஞ்செட்டி போலீசார் சீங்கோட்டை பகுதிக்குச் சென்று பாண்டுரங்கன் என்பவரது,

வீட்டில் சோதனை செய்த பொழுது சீங்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த பாண்டுரங்கன் 65 என்பவரது வீட்டில் பதுக்கி வைத்திருந்த மது பாட்டில்கள் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர் அவரிடமிருந்து 180ml அளவு கொண்ட 37 அரசு மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனர் அஞ்செட்டி காவல் ஆய்வாளர் பாண்டுரங்கன் என்பவர் மீது வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்

Tags

Next Story