நன்னிலம் அருகே மது விற்றவர் கைது

நன்னிலம் அருகே மது விற்றவர் கைது

கள்ளத்தனமாக மது விற்பனை 

நன்னிலம் அருகே கள்ளத்தனமாக மது விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
நன்னிலம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது முடிகொண்டான் ஆற்றுப்பாலம் அருகே சந்தேகத்திற்கு உரிய வகையில் நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தியதில் அவர் அச்சுதம்பேட்டை காலனி தெருவை சேர்ந்த அய்யாவு என்பது தெரியவந்தது. மேலும் அவர் மது பாட்டில்களை விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அய்யாவுவை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து பத்து மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Tags

Next Story