திருமருகல் அருகே சாராயம் விற்றவர் கைது
![திருமருகல் அருகே சாராயம் விற்றவர் கைது திருமருகல் அருகே சாராயம் விற்றவர் கைது](https://king24x7.com/h-upload/2024/03/25/451243-109159483058f3942-9111-48aa-a8e1-8d675fa04e5f-copy-2.webp)
கைது
திருமருகல் அருகே கள்ளச்சாராயம் விற்றவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் அருவிழிமங்கலம் பகுதியில் திருக்கண்ணபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விவேக்ரவிராஜ் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.அப்போது அருவிழிமங்கலம் காலனித்தெருவை சேர்ந்த ராஜேந்திரன் மகன் மோகன்ராஜ் (வயது 21) என்பவர் அந்த பகுதியில் சாராயம் விற்றது தெரியவந்தது.மேலும் இவர் காரைக்கால் பகுதியில் இருந்து சாராயம் கடத்தி வந்து விற்பனை செய்து வருவது விசாரணையில் தெரியவந்தது. இது குறித்து திருக்கண்ணபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து மோகன்ராஜை கைது செய்து அவரிடம் இருந்து 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
Next Story