திருவாலங்காடு அருகே சாராயம் விற்றவர் கைது

திருவாலங்காடு அருகே சாராயம் விற்றவர் கைது

கைது 

திருவாலங்காடு அருகே ஆந்திர மாநிலத்திலிருந்து சாராயம் கடத்தி வந்து விற்பனை செய்தவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 10 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
திருவாலங்காடு ஒன்றியம், நல்லாட்டூர் பகுதியில், ஆந்திர மாநிலத்தில் இருந்து சாராயம் கடத்தி வந்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மாவட்ட எஸ்.பி., சீபாஸ் கல்யாண் உத்தரவின் பேரில் ஆர்.கே.பேட்டை மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி மற்றும் போலீசார் நேற்று நல்லாட்டூர் பகுதியில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார், 60 என்பவர் விற்பனைக்காக வீட்டில் பதுக்கி வைத்திருந்த, 10 லிட்டர் சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். ஜெயக்குமாரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story