3 நாட்கள் மது கடைகள் அடைப்பு- கலெக்டர் அறிவிப்பு !

3 நாட்கள் மது கடைகள் அடைப்பு- கலெக்டர் அறிவிப்பு !

ஆட்சியர் 

பாராளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு 3 நாட்கள் மது கடைகள் அடைப்பு என ஆட்சியர் அறிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்ட கலெக்டரும், தேர்தல் அதிகாரியுமான ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது:- பாராளுமன்ற பொதுத்தேர்தல், 2024 மற்றும் 233, விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தல் ஆகியவை நடைபெறுவதை முன்னிட்டு 17.04.2024 –ம் தேதி காலை 10.00 மணி முதல் தேர்தல் நடைபெறும் நாளான 19.04.2024 நள்ளிரவு வரையும் மற்றும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளான 04.06.2024 அன்றும் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அனைத்து தமிழ்நாடு மாநில வாணிபக் கழக மதுபானக்கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த பார்கள் மற்றும் FL2, FL3, FL3A, FL4A உரிமம் பெற்ற மதுபானக்கூடங்கள் ஆகியவை செயல்படாது என தெரிவித்துள்ளார்.

Tags

Next Story