திருச்சியில் 5 நாள்களுக்கு மதுக் கடைகள் மூடல்

திருச்சியில் 5 நாள்களுக்கு மதுக் கடைகள் மூடல்

மதுக்கடைகள் மூடல்

திருச்சி மாவட்டத்தில் மக்களவைத் தோ்தல், மகாவீா் ஜெயந்தி, மே தினத்தை முன்னிட்டு 5 நாள்களுக்கு டாஸ்மாக் மதுக்கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

மக்களவைத் தோ்தலை முன்னிட்டு ஏப்.17ஆம் தேதி முதல் ஏப்.19ஆம் தேதி இரவு 12 மணி வரை டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்பட வேண்டும். இதேபோல, மகாவீா் ஜெயந்தி, மே தினம் ஆகிய நாள்களிலும் மதுபானக் கடைகள், மதுக்கூடங்கள், பாா்கள் அனைத்து மூடப்பட வேண்டும். தமிழ்நாடு சில்லரை மதுபான விற்பனை சட்ட விதிமுறைகளின்படி இந்த 5 நாள்களும் கட்டாயம் மதுவிற்பனை செய்யக் கூடாது. இதன்படி, தோ்தலுக்காக ஏப். 17ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரையும், ஏப்.21 (மகாவீா் ஜெயந்தி), மே 1 (மே தினம்) ஆகிய ஐந்து நாள்களும் திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுக்கடைகளும் மூடப்பட வேண்டும்.

மேலும், மதுக்கடைகளுடன் இணைந்து செயல்படும் மது அருந்தும் மதுக்கூடங்கள், பிரத்யேக உரிமம் பெற்று விற்பனை நடைபெறும் பாா்கள், நட்சத்திர ஹோட்டல்களுடன் இணைந்து இயங்கும் மதுக்கூடங்கள் அனைத்தும் மூடப்பட வேண்டும். இந்த உத்தரவை மீறி யாரேனும் மதுக்கடைகளை திறந்தாலோ, மது விற்பனை செய்தாலோ தொடா்புடையவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பாா் உரிமங்களும் ரத்து செய்யப்படும் என ஆட்சியா் மா. பிரதீப்குமாா் எச்சரித்துள்ளாா்.

Tags

Next Story