மதுபானக் கடைகள் 3 நாள்கள் மூடப்பட்டிருக்கும் - ஆட்சியா் அறிவிப்பு

மதுபானக் கடைகள் 3 நாள்கள் மூடப்பட்டிருக்கும் - ஆட்சியா் அறிவிப்பு
மதுபானக் கடைகள் 3 நாள்கள் மூடப்பட்டிருக்கும்: ஆட்சியா் அறிவிப்பு
தென்காசி மாவட்டத்தில், ஜன.18, 25 மற்றும் 26-ஆம் தேதிகளில் மதுபானக் கடைகள், மதுபானக் கூடங்கள் மூடப்பட்டிருக்கும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
தென்காசி மாவட்டத்தில் ஜன.18, 25 மற்றும் 26-ஆம் தேதிகளில் மதுபானக் கடைகள், மதுபானக் கூடங்கள் மூடப்பட்டிருக்கும் என்று மாவட்ட ஆட்சியா் துரை.ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், திருவள்ளுவா் தினம் (ஜன.16), வடலூா் ராமலிங்க அடிகளாா் நினைவு தினம்(ஜன. 25), குடியரசு தினத்தையொட்டி (ஜன.26) மேற்குறிப்பிட்ட நாள்களில் தென்காசி மாவட்டத்தில் உள்ள மதுபானக் கடைகள் அதனுடன் இணைந்த மதுபானக் கூடங்கள், தங்கும் விடுதியுடன் கூடிய மதுபானக்கூடங்கள் ஆகியவை மூடப்பட்டிருக்கும். அன்றைய தினம் மதுபானம் விற்பனை நடைபெறாது என்றாா்.

Tags

Next Story