தென்காசியில் மதுபான கடைகள் இயங்காது ஆட்சியர் அறிவிப்பு

தென்காசியில் மதுபான கடைகள் இயங்காது ஆட்சியர் அறிவிப்பு
தென்காசியில் மதுபான கடைகள் இயங்காது ஆட்சியர் அறிவிப்பு
19.04.2024 மற்றும் 04.06.2024 ஆகிய இருநாட்கள் தென்காசியில் மதுபான கடைகள் இயங்காது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, பாராளுமன்ற தேர்தல் 2024 மற்றும் விளாவங்கோடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் தமிழகத்தில் 19.04.2024 அன்று வாக்குப்பதிவு மற்றும் 04.06.2024 அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதை ஒட்டி தென்காசி மாவட்டத்திலுள்ள அரசு மதுபான கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுக்கூடங்கள் மற்றும் தங்கும் விடுதிகளுடன் கூடிய மதுபான கடைகள் (FL1, FL2, FL3, FL3A, & FL11) 17.04.2024 காலை 10 மணி முதல் 19.04.2024 இரவு 12.00 வரை மற்றும் 04.06.2024 ஆகிய தினங்களில் மூடப்பட்டிருக்கும் மற்றும் அன்றைய தினம் விற்பனை ஏதும் நடைபெறாது. இவ்வாறு மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர்தெரிவித்துள்ளார்.

Tags

Next Story