திருப்பூர் மாவட்டத்தில் நாளை மதுக்கடைகள் இயங்காது: மாவட்ட ஆட்சியர்

திருப்பூர் மாவட்டத்தில் நாளை மதுக்கடைகள் இயங்காது: மாவட்ட ஆட்சியர்

மாவட்ட ஆட்சியர் 

திருப்பூர் மாவட்டம் முழுவதும் மகாவீர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு நாளை மதுபான கடைகள் மற்றும் மதுபான கூடங்கள் செயல்படக்கூடாது என மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் உத்தரவிட்டுள்ளார்.

திருப்பூர் மாவட்டத்தில் நாளை மகாவீர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் கீழ் இயங்கி வரும் மதுபான கடைகள் அவற்றுடன் செயல்படும் மதுபானக்கூடங்கள் மனமகிழ் மன்றங்கள் மற்றும் உணவு விடுதிகளுடன் இணைந்து செயல்பட்டு வரும் உரிமம் பெற்ற மதுபான கூடங்கள் ஆகியவை நாளை முழுவதும் மூடப்பட்டு மதுபானங்கள் விற்பனை செய்வதை நிறுத்தம் செய்யப்பட வேண்டுமென அரசு உத்தரவிடப்பட்டுள்ளது.

எனவே திருப்பூர் மாவட்டத்தில் நாளை அனைத்து மதுபான கடைகள், மதுபானக்கூடங்கள், மனமகிழ் மன்றங்கள் மற்றும் உணவு விடுதிகளுடன் இணைந்து செயல்பட்டு வரும் அரசு உரிமம் பெற்ற மதுபானகூடங்கள் ஆகியன செயல்பட மாட்டாது என தெரிவிக்கப்படுகிறது.

தவறும் பட்சத்தில் தொடர்புடையவர் மீது உரிய சட்ட பிரிவுகளின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சித் தலைவர் கிறுஸ்துராஜ் தெரிவித்துள்ளார்...

Tags

Next Story