மோட்டார் சைக்கிளில் சாராயம் கடத்தியவர் கைது

மோட்டார் சைக்கிளில் சாராயம் கடத்தியவர் கைது

காவல் நிலையம் 

நாகை மாவட்டம் திருமருகல் அருகே மோட்டார் சைக்கிளில் சாராயம் கடத்தியவரை கைது செய்து போலீசார் அவரிடமிருந்து 110 லிட்டர் சாராயம் மற்றும் கடத்தலுக்கு பய்னபடுத்திய மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் ஆலமரத்தடி கடைத்தெரு பகுதியில் திருக்கண்ணபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெர்டர் விவேக் ரவிராஜ் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது அந்த வழியாக வேகமாக ஒரு மோட்டார் சைக்கிள் வந்தது.அந்த மோட்டார் சைக்கிளை சந்தேகத்தின் பேரில் மறித்து போலீசார் சோதனை நடத்தினர்.சோதனையில் மோட்டார் சைக்கிளில் இருந்த மூட்டையில் 110 லிட்டர் சாராயம் இருந்தது.

இதை தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்தவரிடம் விசாரணை நடத்தினர்.இதில் அவர் ஆதலையூர் மேலத்தெருவை சேர்ந்த உத்திராபதி மகன் ஜீவானந்தம் (வயது 54) என்பதும் இவர் காரைக்கால் பகுதியில் இருந்து சாராயத்தை மோட்டார் சைக்கிளில் ஆதலையூர் பகுதிக்கு கடத்தி சென்றதும் தெரிய வந்தது.இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரையும் கைது செய்து அவரிடம் இருந்து 110 லிட்டர் சாராயம் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.

Tags

Next Story