தீயில் கருகிய சிறுமி  சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு 

தீயில் கருகிய சிறுமி  சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு 

  வெள்ளிச்சந்தை அருகே ஏழு வயது சிறுமிக்கு கடந்த மாதம் தீ விபத்து ஏற்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.   

வெள்ளிச்சந்தை அருகே ஏழு வயது சிறுமிக்கு கடந்த மாதம் தீ விபத்து ஏற்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு பகுதியை சேர்ந்தவர் வேல் பாண்டி (36). இவரது மனைவி பூமதி (32). இவர்கள் கடந்த 3 மாதத்திற்கு முன்பு குமரி மாவட்டம் வெள்ளிச் சந்தை அருகே வாடகை வீட்டில் குடியிருந்து வருகிறார்கள். இவர்கள் பிள்ளைகள் பள்ளி விடுமுறை முன்னிட்டு வெள்ளமோடிக்கு வந்து பெற்றோர்களுடன் தங்கி இருந்தனர். கடந்த மாதம் 29ஆம் தேதி மாலை வேல்பாண்டியின் இளைய மகள் அஸ்திகா (7) என்பவர் அடுப்பில் பால் காய்ச்சுவதற்கு பெயிண்ட் டப்பாவில் இருந்த டின்னரை எடுத்து அடுப்பில் ஊற்றி உள்ளார். அப்போது அஸ்திகாவின் ஆடையில் தீப்பற்றிக் கொண்டது. அவரது அலறல் சத்தம் கேட்டு அம்மா பூமதி அக்கா ஆதிலட்சுமி ஆகியோர் அஸ்திகாவின் ஆடையில் பிடித்த தீயை அணைக்க முயற்சி த்தனர்.

இதில் அவர்கள் மீதும் தீ பற்றி கொண்டது. தீக்காயம் அடைந்த மூன்று பேர் அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு மூன்று பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் அம்மா பூமதி அக்கா ஆதிலட்சுமி சிகிச்சை முடிந்து கடந்த வாரம் வீடு திரும்பினர். அஸ்திகாவுக்கு சிகிட்சை நடந்து வந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அஸ்திகா நேற்று இரவு பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து வேல்பாண்டி வெள்ளிச்சந்தை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story