கால்நடை விழிப்புணர்வு முகாம்

கால்நடை விழிப்புணர்வு முகாம்

கால்நடை முகாம்


அரியலூர் மாவட்ட கால்நடை பராமரிப்பு துறை சார்பில் கடுகூர் ஊராட்சிக்குட்பட்ட மணக்குடி கிராமத்தில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் இன்று நடைப்பெற்றது. இதனை ஊராட்சிமன்ற தலைவர் சங்கீதா அசோக்குமார் தொடங்கி வைத்தார். இதில் பெரிய மணக்குடி, சின்ன மணக்குடி, நுரையூர் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த 63 விவசாயிகள் தங்களுடைய 363 பசுமாடுகள், 134 செம்மறி ஆடுகள், 281 வெள்ளாடுகள் உள்ளிட்ட 975 கால்நடைகளை கொண்டுவந்து முகாமில் பயடைந்தனர்.

இதில் கோமாரி நோய் தடுப்பூசி, ஆட்டுகொல்லி நோய் தடுப்பூசி மற்றும் குடற்புழு நீக்கம் செய்யபட்டது. பின்னர் ஆட்டுக்கொல்லி நோய் மற்றும் கோமாரி நோயினை தடுப்பதற்கான முறைகள் குறித்தும் எடுத்து கூறப்பட்டது. பின்னர் 10 கிடேரி கன்றுகளுக்கு பரிசுகள் வழங்கபட்டது. இந்த முகாமில் கடுகூர் கால்நடை மருத்துவர் குமார் மற்றும் கால்நடை உதவி மருத்துவர்கள், உதவியாளர்கள், அக்கிராம பொதுமக்கள், விவசாயிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story