உணவில் பல்லி கிடந்த விவகாரம் - பாஸட் புட் கடையை தற்காலிக மூட உத்தரவு.

உணவில் பல்லி கிடந்த விவகாரம் - பாஸட் புட் கடையை தற்காலிக மூட உத்தரவு.

பப்ஸில் இருந்த பல்லி

நீலகிரி மாவட்டம் குன்னூர் உபதலை கிராமத்தை சேர்ந்தவர் விஜயகுமார். இவர் நேற்று இரவு பாய்ஸ் கம்பெனி பகுதியில் உள்ள பாஸ்ட் புட் கடையில், 4 சிக்கன் பப்ஸ்கள் வாங்கி சென்றுள்ளார். வீட்டிற்கு சென்று தனது மனைவி, மகன் உட்பட 3 பேரும் இந்த பப்ஸ்களை சாப்பிட்டுள்ளனர். 4வது பப்சை இவரின் மகன் உட்கொள்ள எடுத்து பார்த்த போது இருந்த பொருளை கொத்தமல்லி என நினைத்து அதை தனியே எடுத்துள்ளார். அப்போது அது பல்லி என தெரிய வந்தது. உடனடியாக 3 பேரும் குன்னூர் அரசு மருத்துமனைக்கு சென்று சிகிச்சை பெற்று இன்று காலை வீடு திரும்பினர். இந்த விவகாரம் தொடர்பாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரி கடையில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அந்த கடைக்கு பூட்டு போட்டு சாவியை எடுத்து சென்றனர்.

Tags

Next Story