பள்ளி வாகனத்தில் சிக்கி எல்கேஜி மாணவன் உயிரிழப்பு!

பள்ளி வாகனத்தில் சிக்கி எல்கேஜி மாணவன் உயிரிழப்பு!

 திருப்பத்தூர் அருகே பள்ளி வாகனத்தில் சிக்கி எல்கேஜி மாணவன் உயிரிழந்தது அப்பகுதி மக்களிடையே பலத்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் அருகே பள்ளி வாகனத்தில் சிக்கி எல்கேஜி மாணவன் உயிரிழந்தது அப்பகுதி மக்களிடையே பலத்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் அருகே பள்ளி வாகனத்தில் சிக்கி எல்கேஜி மாணவன் உயிரிழந்தது அப்பகுதி மக்களிடையே பலத்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் சிம்மனபுதூர் பகுதியைச் சேர்ந்த ராஜசேகரனின் மகன் பிரித்திவி (3) விஷமங்கலத்தில் இயங்கி வரும் தனியார் மேல்நிலைப்பள்ளி பள்ளியில் எல்கேஜி படித்து வருகிறார் இந்த நிலையில் வழக்கம் போல் பள்ளி வாகனம் பிருதிவியை அழைத்துச் செல்ல வீட்டின் அருகாமையில் வந்துள்ளது அப்போது பிரித்திவியின் தந்தை ராஜசேகரன் பள்ளி வாகனத்தில் குழந்தையை ஏற்றிவிட்டு சென்றுள்ளார். அப்போது பள்ளி வாகனத்தின் ஓட்டுனர் வாகனத்தை இயக்க முற்படும்போது எதிர்பாராத விதமாக ராஜசேகர் இரண்டாவது மகன் ஒன்றரை வயது உள்ள புனிதன் திடீரென ஓடிவந்து பள்ளியின் பின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்து உள்ளார். பின்னர் குழந்தையை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மருத்துவமனை முன்பு பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் கதறி அழுத காட்சி அனைவரையும் கண்கலகச் செய்தது மேலும் உயிரிழந்த குழந்தையின் தாத்தா முருகன் தனது பேரனை பள்ளி வாகனத்தை ஏத்தி கொன்றுவிட்டதாக மருத்துவமனையின் முன்பு கதறி அழுதார். மேலும் இந்த சம்பவம் குறித்து திருப்பத்தூர் கிராமிய போலீசார் பள்ளி வாகன ஓட்டுனரான முனியப்பனை கைது செய்தனர் பள்ளி வாகன பின் சக்கரத்தில் சிக்கி ஒன்றை வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story