மாரடைப்பால் லாரியில் வந்த லோடுமேன் உயிரிழப்பு - போலீசார் விசாரணை

மாரடைப்பால் லாரியில் வந்த லோடுமேன் உயிரிழப்பு - போலீசார் விசாரணை
மாரடைப்பால் லோடுமேன் உயிரிழப்பு

சென்னையில் உள்ள தனியார் பார்சல் சர்வீசிலிருந்து பொருட்களை ஏற்றிக்கொண்டு ஓட்டுநர் சுரேஷ் மற்றும் ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை சேர்ந்த லோடுமேன் பூமிநாதன் ஆகிய இருவரும் ஈச்சர் லாரியில் மதுரைக்கு சென்று கொண்டிருந்தனர். அப்பொழுது மதுராந்தகம் அடுத்த அச்சரப்பாக்கம் தேசிய நெடுஞ்சாலையில்சென்று கொண்டிருந்தபோது லோடுமேன் பூமிநாதனுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் பூமிநாதன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த அச்சரப்பாக்கம் போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து மரணம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story