சேலத்தில் இந்தியன் வங்கி சார்பில் கடன் வழங்கும் முகாம்

சேலத்தில் இந்தியன் வங்கி சார்பில் கடன் வழங்கும் முகாம்

சேலத்தில் இந்தியன் வங்கி சார்பில் கடன் வழங்கும் முகாம் நடந்தது.


சேலத்தில் இந்தியன் வங்கி சார்பில் கடன் வழங்கும் முகாம் நடந்தது.

இந்தியன் வங்கி கடன் வழங்கும் முகாம் சேலம் ராடிசன் ஓட்டலில் நடந்தது. இந்தியன் வங்கி நிர்வாக இயக்குனர் சாந்தி லால் ஜெயின் தலைமை தாங்கி கடன் திட்டங்கள் குறித்து பேசினார். சேலம், தர்மபுரி மண்டலங்களை சேர்ந்த சிறு, குறு தொழில் முனைவோர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் கோவை இந்தியன் வங்கி ஸ்ரீமதி, பி.சுதாராணி ஆகியோர் வரவேற்றனர். தொடர்ந்து இந்தியன் வங்கி ஆர்.பி.டி. பொதுமேலாளர் சந்திரசேகரன் கலந்து கொண்டு பேசினார்.

மேலும் 112 வாடிக்கையாளர்களுக்கு ரூ.118 கோடியே 23 லட்சம் கடனுக்கான அனுமதி கடிதத்தை நிர்வாக இயக்குனர் சாந்திலால் ெஜயின் வழங்கினார். மண்டல மேலாளர்கள் ஸ்ரீமதி, பத்மாவதி ஸ்ரீகாந்த், துணை மண்டல மேலாளர்கள் ரத்தினவேல், பிரேந்திரகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். சேலம் மண்டல மேலாளர் ராஜ்குமார் நன்றி கூறினார்.

Tags

Next Story