கல்வி கடனுதவி வழங்கிய ஆட்சியர்

கல்வி கடனுதவி வழங்கிய ஆட்சியர்

கல்வி கடன் 

அரியலூரில் நடைபெற்ற கல்வி கடன் மேளாவில் ஆட்சியர் பங்கேற்றார்.

அரியலூர் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு மற்றும் டிப்ளமோ, ITI படிப்பதற்கும், கல்லூரிகளில் முதலாமாண்டு முதல் நான்காமாண்டு வரை படித்து கொண்டிருக்கும் மாணவ, மாணவிகளுக்கான கல்வி கடன்மேளா மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் ஆனிமேரி ஸ்வர்ணா தலைமையில் நடைப்பெற்ற நிகழ்ச்சியில் SBI வங்கி, இந்தியன் வங்கி உள்ளிட்ட 19 வங்கிகள் பங்கேற்றன. இதில் 58 பேருக்கு 2.06 கோடி மதிப்பீட்டில் கல்வி கடனுதவிகள் வழங்கபட்டது.

மேலும் இதனை பயன்படுத்தி வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஆனிமேரி ஸ்வர்ணா தெரிவித்தார். இதில் திட்ட இயக்குனர் உள்ளிட்ட அரசுதுறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story