ராமநாதபுரம்: சுய உதவிக்குழுக்களுக்கு கடன் வழங்கும் நிகழ்ச்சி

ராமநாதபுரத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் வழங்கும் விழா நடைபெற்றது.

ராமநாதபுரத்தில் தமிழ்நாடு அரசு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊரட்சித்துறையின் மூலம் மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு வங்கிக்கடன் இணைப்பு மற்றும் மதி எக்ஸ்பிரஸ் மின் வாகனங்களை வழங்கும் விழா நடைபெற்றது.

இவ்விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் தலைமை வகித்தார். ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் முன்னிலைவகுத்தார். நகர் மன்ற தலைவர் ஆர். கே. கார்மேகம் துணை தலைவர் பிரவீன்தங்கம், மண்டபம் ஒன்றிய செயலாளர் கே.ஜே.பிரவின் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இவ்விழாவில் திருப்புல்லாணி, ஆர்.எஸ்.மங்கலம், திருவாடானை,பகுதிகளில் இருந்து ஏராளமான சுய உதவி குழுக்கள் கடன் இணைப்பு பெற வந்திருந்தனர்.இவ்விழாவில் ரூ 475. 68 லட்சம் கடனுதவி வழங்கப்பட்டது. மேலும் மதி வாகன எக்ஸ்பிரஸ் வாகனம் 3 பேருக்கு 9.60 லட்சம் மதிப்பீட்டில் வழங்கப்பட்டது.

Tags

Next Story