உள்ளாட்சி தினம் : குப்பம் ஊராட்சியில் சிறப்பு கிராம சபை

உள்ளாட்சி தினம் : குப்பம் ஊராட்சியில் சிறப்பு கிராம சபை

கிராம சபை கூட்டம் 

குப்பம் ஊராட்சி சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கரூர் மாவட்டம் கா பரமத்தி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட குப்பம் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு ஊராட்சி மன்ற தலைவர் குப்பாத்தாள் தலைமையில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் துணைத் தலைவர் ஜெயசூர்யா, கிராம நிர்வாக அலுவலர் கதிர்வேல், ஊராட்சி செயலாளர் பழனிச்சாமி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பெயர் நளினி, கிராம சுகாதார செவிலியர் இந்துமதி உள்ளிட்ட கிராம பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கிராமத்தில் உள்ள குறைகள் குறித்து சிறப்பு கிராம சபை கூட்டத்தில் முறையிட்டனர். குறிப்பாக குடிநீர் தட்டுப்பாடு உள்ளதால், அதனை தீர்க்க போதிய ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். ஊராட்சி மன்ற தலைவர் உரிய நடவடிக்கை எடுத்து குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என உறுதி அளித்தார்.

Tags

Next Story