உள்ளாட்சி தினம் - மாங்கால் ஊராட்சியில் சிறப்பு கிராம சபை

உள்ளாட்சி தினம் - மாங்கால் ஊராட்சியில் சிறப்பு கிராம சபை

கிராம சபை கூட்டம் 

செய்யாறு அருகே வெம்பாக்கம் வட்டம் மாங்கால் ஊராட்சியில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே வெம்பாக்கம் வட்டம் மாங்கால் ஊராட்சியில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் ராஜாராம் தலைமை தாங்கினார், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன் வெம்பாக்கம் ஒன்றிய குழு தலைவர் டி ராஜு ஆகியோர் முன்னிலை வகித்தனர், வட்டார வளர்ச்சி அலுவலர் மோகன்ரங்கன் அனைவரையும் வரவேற்றார். கூட்டத்தில் ஊராட்சி செயலாளர் செல்வகுமார் தீர்மானமங்களை வாசித்தார். செய்யாறு எம்.எல்.ஏ ஜோதி பங்கேற்று அரசின் நல திட்டங்களை எடுத்து கூறி பெண்களுக்கான ஆட்சி எப்போதும் மகளிருக்கு முன்னுரிமை வழங்கி வருகிற ஆட்சி என சிறப்புரையாற்றினார் . கூட்டத்தில் கலந்து கொண்ட மகளிர் தங்கள் பகுதியில் பேருந்துகள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். வீடு இல்லாத நபர்களுக்கு வீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர். இந்நிகழ்வில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் தெய்வமணி, ஒன்றிய செயலாளர்கள் சங்கர், ஞானவேல், அயலக அணி துணை செயலாளர் கார்த்திகேயன், ராம்ரவி வேளாண்மை மற்றும் கால்நடை துறையினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story