தீர்த்தகிரீஸ்வரர் கோவில் திருவிழாவை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

தீர்த்தகிரீஸ்வரர் கோவில் திருவிழாவை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

மாவட்ட ஆட்சியர் சாந்தி IAS 

தர்மபுரி தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் கோயில் விழாவை முன்னிட்டு மார்ச் 1ம் தேதி உள்ளூர் விடுமுறை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.
தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி IAS வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது,அரூர், தீர்த்தமலை அடுத்த தீர்த்தகிரீஸ்வரர் கோயில் மாசிமக தேரோட்ட திருவிழா நடைபெறுவதையொட்டி, மார்ச் 1ம் தேதி (வெள்ளிக்கிழமை) அரூர் வருவாய் கோட்டத்திற்குட்பட்ட அரூர் மற்றும் பாப்பி ரெட்டிப்பட்டி வட்டங்களுக்கு மட்டும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. ஆனால், அன்றைய தினம் அரசு பொதுத்தேர்வுகள் திட்டமிட்டவாறு நடைபெறும். பொதுத் தேர்வு எழுதவுள்ள மாணவர்கள், தேர்வுப்பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு உள்ளூர் விடுமுறை பொருந்தாது. இந்த உள்ளூர் விடுமுறையை ஈடுகட்டும் வகையில், வரும் 16ம் தேதி (சனிக்கிழமை) பணி நாளாக அறிவிக்கப்படுகிறது. உள்ளூர் விடுமுறை நாளன்று, அரூர் வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட சார்நிலை கருவூலங்கள். அரசு பாதுகாப்புக்கான அவசர ர அலுவல்களைக் கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் சாந்தி IAS தெரிவித்துள்ளார்.

Tags

Next Story