பூட்டை உடைத்து தங்கநகை கொள்ளை

பூட்டை உடைத்து தங்கநகை கொள்ளை

மேட்டூரில் வீட்டின் பூட்டை உடைத்து 11 சவரன் தங்க நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளன.  

மேட்டூரில் வீட்டின் பூட்டை உடைத்து 11 சவரன் தங்க நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளன.
மேட்டூர் அருகே மேச்சேரி செம்பனூர் பகுதியை சேர்ந்தவர் முருகன் (45).இவர் சேலத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் கார் ஓட்டுநனராக பணிபுரிந்து வருகிறார்.முருகன் வேலை முடிந்து வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து இருந்தது.வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்து 11 சவரன் தங்க நகைகள் கொள்ளை போனது கண்டு அதிர்ச்சி அடைந்தவர்,உடனடியாக மேச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப் பகலில் வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி கிராம மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story