அச்ச்சிருபாக்கம் பூட்டி கிடக்கும் மாற்று திறனாளிகள் கழிப்பறை

அச்ச்சிருபாக்கம் பூட்டி கிடக்கும் மாற்று திறனாளிகள் கழிப்பறை
பூட்டிய நிலையில் காணப்படும் மாற்று திறனாளிகள் கழிப்பறை
அச்ச்சிருபாக்கம் பூட்டி கிடக்கும் மாற்று திறனாளிகள் கழிப்பறை திறக்க கோரிக்கை வைத்துள்ளனர்.

அச்சிறுபாக்கம் பேரூராட்சி 15 வார்டுகளை உள்ளடக்கியது. இதில், 10வது வார்டுக்குட்பட்ட பகுதியில், பேரூராட்சி அலுவலகத்திற்கு எதிரே, கடந்த 2011 -- 12ம் ஆண்டு மாற்றுத்திறனாளிகள் கழிப்பறை கட்டப்பட்டது. தற்போது, ஒரு ஆண்டுக்கு மேல் மக்கள் பயன்பாடின்றி பூட்டியே கிடக்கிறது.

பயணியர் நிழற்குடை அருகே உள்ள கழிப்பறை பூட்டியே கிடப்பதால், இயற்கை உபாதைகளை கழிக்க சிரமப்படுகின்றனர். எனவே, பேரூராட்சி நிர்வாகத்தினர், உடனடியாக கழிப்பறையை திறந்து, பராமரிப்புக்கு நிரந்தர பணியாளர் ஒருவரை நியமித்து, மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story