சிவகாசியில் லோடுமேன் தூக்குபோட்டு தற்கொலை !!

சிவகாசியில் லோடுமேன் தூக்குபோட்டு தற்கொலை !!

வழக்கு பதிவு

சிவகாசி அருகே லோடுமேன் தூக்கு போட்டு தற்கொலை.போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிவகாசி அருகே லோடுமேன் தூக்கு போட்டு தற்கொலை.போலீஸார் விசாரணை. விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள சித்துராஜபுரம் ராமசாமி நகரை சேர்ந்தவர் லோடுமேன் தமிழரசன் (35).இவருக்கு முருகேஸ்வரி என்ற மனைவியும், ஒரு மகளும், மகனும் உள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழரசன், தனது மனைவியிடம், மகளுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என கனவில் வந்த காளிசாமி கூறியதாக தெரிவித்துள்ளார். இதற்கு முருகேஸ்வரி எதிர்ப்பு தெரிவித்து மகளுக்கு 14 வயது தான் ஆகிறது.பிறகு திருமணம் செய்து வைக்கலாம் என்று கூறி உள்ளார்.

இதனை ஏற்க மறுத்த தமிழரசன் குடித்து விட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது.இந்த நிலையில் முருகேஸ்வரி குழந்தைகளுடன் கோவையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டார்.வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தமிழரசன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து தகவல் அறிந்த முருகேஸ்வரி கோவையில் இருந்து சிவகாசி திரும்பினார்.இந்த தற்கொலை சம்பவம் குறித்து சிவகாசி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story