நாமக்கல்லில் மார்ச் 9ல் லோக் அதாலத்

நாமக்கல்லில் மார்ச் 9ல் லோக் அதாலத்

  நாமக்கல்லில் லோக் அதாலத் எனும் தேசிய மக்கள் நீதிமன்றம் மார்ச் 9ம் தேதி நடக்கிறது.  

நாமக்கல்லில் லோக் அதாலத் எனும் தேசிய மக்கள் நீதிமன்றம் மார்ச் 9ம் தேதி நடக்கிறது.

நாமக்கல்லில் லோக் அதாலத் எனும் தேசிய மக்கள் நீதிமன்றம் வருகிற மார்ச் 9-ஆம் தேதி நடைபெறுகிறது.

இதுகுறித்து நாமக்கல் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு தலைவரும் முதன்மை நீதிபதியுமான என்.குணசேகரன், செயலரும் சாா்பு நீதிபதியுமான சி. விஜய்காா்த்திக் ஆகியோா் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது... தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழு மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழு அறிவுறுத்தலின்படி, நாமக்கல் - திருச்செங்கோடு சாலையில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், திருச்செங்கோடு, ராசிபுரம், பரமத்தி, சேந்தமங்கலம் மற்றும் குமாரபாளையம் நீதிமன்றங்களில் வருகிற மார்ச் 9-ஆம் தேதி தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம் நடைபெற இருக்கிறது.

ஏற்கெனவே நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வழக்குகளில் சமரசம் செய்து கொள்ளக் கூடிய குற்றவியல் வழக்குகள், காசோலை தொடா்பான வழக்குகள், வங்கி, கல்விக் கடன்கள் தொடா்பான வழக்குகள், மோட்டாா் வாகன விபத்து வழக்குகள், விவகாரத்து தவிா்த்த மற்ற குடும்பப் பிரச்னைகள் தொடா்பான வழக்குகள், வருமான வரி, சொத்துவரி பிரச்னைகள் போன்ற வழக்குகள் விசாரிக்கப்படும். மக்கள் நீதிமன்றம் முன்பாக முடித்துக் கொள்ளும் வழக்குகளுக்கு மேல்முறையீடு கிடையாது. வழக்குகளுக்கு செலுத்தப்படும் நீதிமன்றக் கட்டணம் முழுமையாகத் திருப்பி தரப்படும் வாய்ப்பு உள்ளது. பொதுமக்கள் யாருக்காவது நீதிமன்றத்தில் மேலே குறிப்பிட்ட வழக்குகள் நிலுவையில் இருக்கும் பட்சத்தில், சட்ட ரீதியாகவும், சமரச முறையிலும் தீா்வு காணப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story