மக்களவை தேர்தல் : தர்மபுரி உழவர் சந்தைக்கு நாளை விடுமுறை

மக்களவை தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை உறுதி செய்யும் வகையில் தர்மபுரி மாவட்ட உழவர் சந்தைகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தர்மபுரி நான்கு ரோடு அருகே அமைந்துள்ள உழவர் சந்தையில் தினந்தோறும் ஏராளமான பொதுமக்கள் காய்கறிகளை வாங்கிச் செல்ல வந்து செல்கின்றனர் நாளை தர்மபுரி நாடாளுமன்ற பொதுத் தேர்தல் நடைபெற உள்ளதால் பொதுமக்கள் அனைவரும் 100% வாக்குகளை பதிவு செய்ய வேண்டும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அதன் அடிப்படையில் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தர்மபுரி, வட்டப்பட்டி ,காரிமங்கலம், பாலக்கோடு, பென்னாகரம் போன்ற பகுதியில் இருக்கும் அனைத்து உழவர் சந்தைகளும் நாளை விடுமுறை என்பது மாவட்ட நிர்வாகம் தெரிவிக்கப்பட்டுள்ளது அதை தொடர்ந்து உழவர் சந்தை இன்று வரும் பொது மக்களுக்கு அறிவிப்பு பலகையில் நாளை விடுமுறை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது மாவட்ட நிர்வாகம் அனைவரும் கட்டாயம் 100% வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.

Tags

Next Story