ராமநாதபுரத்தில் தீவிர வாகன சோதனை

ராமநாதபுரத்தில்  தீவிர வாகன சோதனை

வாகன சோதனை

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு மதுரை ராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலையில் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
இந்தியாவில் ஏழு கட்டங்களாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தலும், ஜூன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெற உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டை அடுத்து தேர்தல் நடத்தைகள் அமலுக்கு வந்துள்ளது. இதனை அடுத்து மதுரை - ராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலையில் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். உரிய ஆவணங்கள் இன்றி ரூபாய் நோட்டுகள் கொண்டு செல்லப்படுகிறதா? அல்லது பரிசு பொருட்கள் ஏதும் கொண்டு செல்லப்படுகிறதா என வாகனங்களில் சோதனை செய்து வருகின்றனர். ராமநாதபுரம் தொகுதியில் பறக்கும் படை வாகனங்கள் அமைக்கப்பட்டு தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags

Next Story