அச்சம் தவிர்க்க காவல்துறையினர் அணிவகுப்பு

அச்சம் தவிர்க்க காவல்துறையினர் அணிவகுப்பு

கொடி அணிவகுப்பு

நாகப்பட்டினத்தில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிப்பதை வலியுறுத்தி தமிழக மற்றும் ஒரிசா காவல் துறையினர் கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடத்தினர்.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு மக்கள் பயமின்றி வாக்களிக்கவும், மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாகவும், பிரச்சனை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் இருப்பவர்களை எச்சரிக்கும் விதமாகவும் நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங் தலைமையில் நாகை மாவட்ட காவல்துறையினர் மற்றும் ஒரிசா மாநில காவல் துறையினர் இணைந்து கொடி அணிவகுப்பு நடைப்பெற்றது.

இக்கொடி அணிவகுப்பானது நாகூர் பேருந்து நிலையத்தில் தொடங்கி முக்கிய பகுதிகளான, நெல்லுக்கடை தெரு, நாகூர் தர்கா, பண்டகசாலை, மியான் தெரு, சிவன் கீழ வீதி வழியை சென்று வாஞ்சூர் சோதனை சாவடியில் நிறைவு பெற்றது மேலும் இவ்வனி வகுப்பில் ஒரிசா காவல்துறையினர், நாகை மாவட்ட தாலுகா காவல்துறையினர், மாவட்ட ஆயுதப்படை காவல்துறையினர்,தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர்,என சுமார் 300 காவல்துறையினர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story