கீழ்வேளூரில் ரூ.80 ஆயிரம் பறிமுதல்

கீழ்வேளூரில் ரூ.80 ஆயிரம் பறிமுதல்
பைல் படம் 
கீழ்வேளூர் அருகே வெண்மணியில் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.80 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.
நாகை மாவட்டம் கீழ்வேளூர் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட வெண்மணி கிராமம் கச்சனம் சாலையில் உள்ள வெண்மணி ஆர்ச் பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி தெய்வேந்திரன் மற்றும் போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனர் அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனை செய்தனர். மோட்டார் சைக்கிளில் வந்த கீழ்வேளூர் ஒன்றியம் கிள்ளுக்குடி ஊராட்சி மெயின் ரோட்டை சேர்ந்த தமிழ் செல்வன் என்பவரிடம் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.80 ஆயிரம் இருந்தது தெரிய வந்தது .இதையடுத்து பறக்கும் படையினர் அந்த பணத்தை பறிமுதல் செய்து கீழ்வேளூர் தாசில்தார் அலுவலகத்தில் கூடுதல் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கவிதாஸ் , உதவி தாசில்தார் நித்யா ஆகியோரிடம் ஒப்படைத்தனர். பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட பணம் கீழ்வேளூர் சார் நிலை கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது

Tags

Read MoreRead Less
Next Story