சர்வர் கோளாறு காரணமாக நீண்ட வரிசையில் காத்திருப்பு

சர்வர் கோளாறு காரணமாக நீண்ட வரிசையில் காத்திருப்பு

வேலூரில் நடந்த மக்கள் குறை தீர்வு கூட்டத்திற்கு வந்திருந்த மக்கள் சர்வர் கோளாறு காரணமாக நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.  

வேலூரில் நடந்த மக்கள் குறை தீர்வு கூட்டத்திற்கு வந்திருந்த மக்கள் சர்வர் கோளாறு காரணமாக நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

வாரந்தோறும் நடைபெறும் மக்கள் குறை தீர்வு கூட்டம் தேர்தல் நடத்தை விதிகள் விலக்கிக் கொள்ளப்பட்டதற்கு பிறகு வேலூர் ஆட்சியர் அலுவலகத்தில் இரண்டாவது முறையாக இன்று நடந்தது. கூட்டத்தில் மனு அளிப்பதற்காக வேலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 500க்கும் மேற்பட்டோர் வந்தனர். குறைதீர்வு கூட்டம் காலை 10 மணிக்கு துவங்கிய நிலையில் , ஆட்சியரிடம் மனு அளிப்பதற்கு முன்பு மனு ஒப்புதல் ரசீது பெற பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

முதல் அரை மணி நேரம் மட்டுமே கணினி சர்வர் வேலை செய்த நிலையில் சுமார் 2.5 மணி நேரத்திற்கு மேலாக ரசீது வழங்குவதற்கான சர்வர் வேலை செய்யவில்லை. அதனைத் தொடர்ந்து, மனு ஒப்புதல் ரசீதை கையில் எழுதி கொடுக்கும் சூழல் ஏற்பட்டது. இதனால் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர் என ஏராளமானோர் வரிசையில் காத்திருந்து ரசீதை பெற்ற பின்பு ஆட்சியரிடம் மனு அளித்தனர். சர்வர் கோளாறு காரணமாக மனு அளிக்க வந்த மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.

Tags

Next Story