உங்களை தேடி உங்கள் ஊரில் : அலுவலர்களுடன் ஆட்சியர் ஆலோசனை

உங்களை தேடி உங்கள் ஊரில் : அலுவலர்களுடன் ஆட்சியர் ஆலோசனை

ஆலோசனை கூட்டம் 

மேட்டூர் சார் ஆட்சியர் அலுவலகத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம் குறித்து அனைத்து அரசு துறை அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி ஆலோசனை நடத்தினார்.
உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் மூலம் பொதுமக்கள் இருக்கும் இடங்களுக்கு நேரில் சென்று குறைகளை கேட்டு உடனுக்குடன் தீர்வு காண இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.நன்பகல் 3 மணிக்கு மேட்டூர் அருகே வெள்ளார் கிராமத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையிலான அனைத்து அரசு துறை அலுவலர்களும் பொதுமக்களை நேரில் சென்று கோரிக்கை மனுக்களை பெற்றனர். இதில் கூடுதல் ஆட்சியர் அலர்மேல்மங்கை, மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா, சார் ஆச்சியர் பொன்மணி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருன் கபிலன் உள்ளிட்ட அனைத்து துறை அரசு அதிகாரிகளும் பங்கேற்றனர்.

Tags

Next Story