"உங்களைத் தேடி உங்கள் ஊரில்" - மாவட்ட ஆட்சியர் ஆய்வு

அரவக்குறிச்சி வட்ட பகுதிகளில் "உங்களைத் தேடி உங்கள் ஊரில்" திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் பல்வேறு பணிகளை ஆய்வு செய்தார்.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி வட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் மாவட்ட ஆட்சியர் தங்கவேல், தமிழக அரசு அமல்படுத்தியுள்ள "உங்களைத் தேடி உங்கள் ஊரில்" திட்டத்தின் கீழ் பல்வேறு திட்ட பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த திட்டத்தின் கீழ் அரவக்குறிச்சி தாலுக்கா, மலைக்கோவிலூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்நோயாளிகள் பிரிவு , வெளி நோயாளிகள் பிரிவு, மருந்துகள் இருப்பு, சித்த மருத்துவ பிரிவு, மகப்பேறு பிரிவு ஆகிய சிகிச்சை பிரிவுகளை ஆய்வு மேற்கொண்டார். மேலும் இந்த மருத்துவமனையில் பிரசவித்த தாய்மார்களுக்கு தாய் சேய் பெட்டகங்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தார் ஆட்சியர் தங்கவேல். தொடர்ந்து,ரூ 50- இலட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டு வரும் சுகாதார வளாக கட்டிட பணிகளை பார்வையிட்டு, விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினர். தொடர்ந்து அதே பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தேசிய நெடுஞ்சாலை 7-ல் சாலை அமைப்பதற்காக, நிலம் கையகப்படுத்தியத்தில், விடுபட்ட நிலங்களுக்கு பட்டா வழங்குவதற்கு மனு அளித்தனர். மாவட்ட ஆட்சியர் உடனடியாக அந்த மனுவின் அடிப்படையில், நிலம் கையகப்படுத்திய 27 குடும்பங்களுக்கு பட்டா வழங்குவதற்காக, நிலங்களை மறு சர்வே செய்ய அறிவுறுத்தினார்.

Tags

Next Story