உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டம்; கலெக்டர் ஆய்வு

உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டம்; கலெக்டர் ஆய்வு

 கீழ்வேளூர் தாலுக்காவில் உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ் கலெக்டர் ஆய்வு செய்தார்.

கீழ்வேளூர் தாலுக்காவில் உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ் கலெக்டர் ஆய்வு செய்தார்.

உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டம் தொடக்கம் கீழ்வேளூர் தாலுக்காவில் கலெக்டர் ஆய்வு.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்த ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ எனும் புதிய திட்டம் கடந்த மாத தொடங்கியது.இந்த திட்டத்தின் படி நாகை மாவட்ட ஆட்சியர் ஜானிடாம் வர்கீஸ், கீழ்வேளூர் வட்டத்தில் ஒரு நாள் முழுவதும் ஆய்வு மேற்கொண்டார். கீழையூர் ஒன்றியம் பிரதாபராமபுரம் ஊராட்சியில் உள்ள நெகிழி மறுசுழற்சி மையத்தை மாவட்ட ஆட்சியர் ஜானிடாம் வர்கீஸ் பார்வையிட்ட பின்னர் அங்கு பணி புரியும் தூய்மை பணியாளர்களிடம் பணிகள் குறித்து கே ட்டரிந்து பிளாஸ்டிக் கழிவுகளை அதிகளவில் சேகரித்து தரவேண்டும் எனவும் கூறினார்

தொடர்ந்து வேளாங்கண்ணி யில் உள்ள பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் ஆய்வு மேற்கொண்டு இங்கு பால் கொண்டு வரும் பால் உற்பத்தியாளர்களுக்கு வங்கி கடன் வழங்க அலுவலருக்கு உத்தரவிட்டார்.அதன் பின் வேளாங்கண்ணி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வில் வங்கியில் கடன் பெற்ற மீனவர்கள் விவசாயிகள் மற்றும் மகளிர் சுய உதவி குழு பெண்களின் கடன் பற்றி விவரங்களின் கோப்பு குறித்து ஆய்வு செய்தார். பின்னர் வேளாங்கண்ணி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டு சிகிச்சை பெற்று வரும் கர்ப்பிணி பெண்கள் விவரங்கள் குறித்தும் அவர்கள் அனைவரும் குறிப்பிட்ட கால இடைவெளியில் முறையாக மருத்துவ பரிசோதனை செய்து கொள்கிறார்களா என்பதை உறுதி செய்ய வேண்டும் என மருத்துவர்களை கேட்டுக் கொண்டார்.

அப்போது ஆட்சியரை காரை வழிமறைத்த இரண்டு பூம்பூம் மாட்டுக்கார பெண்கள் தங்களுக்கு வீடு வேண்டும் என கண்ணீருடன் கோரிக்கை வைத்தனர் இதையடுத்து அவர்கள் வசிக்கும் வேளாங்கண்ணி யில் ஆய்வு மேற்கொண்டார்.மேலும் அங்கு வசிக்கும் நான்கு பூம்பூம் மாட்டுக்கார பெண்களுக்கும் குடும்பத்தினருக்கும் பாப்பா கோயில் வீடுகள் வழங்குவதற்கான சாத்தியக்கூறு இருந்தால் நடவடிக்கை எடுக்க வட்டாச்சியரிடம் கூறினார். அதனைத் தொடர்ந்து வே ளாங்கண்ணி மையத்தில் படிக்கும் குழந்தைகளுக்கு உணவு பரிமாறினார். பின்னர் அங்கு கட்டப்பட்டு வரும் நீர் தேக்க தொட்டியினை ஆய்வு செய்து கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார். பின்னர் கீழ்வேளூர் ஒன்றியம் கீழ்வேளூர், குறுக்கத்தி நீலப்பாடி ஆகிய இடங்களில் செயல்பட்டு வரும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டார் அப்பொழுது கொள்முதல் செய்யப்பட்ட மூட்டைகளின் எடையை சரி பார்த்த கலெக்டர் பட்டியல் எழுத்தர், உதவியாளர் ,சுமை தூக்குவோர் ஆகியோரிடம் 17 சதவீதம் ஈரப்பதத்திற்குள், சரியான எடையில், விவசாயிகளிடம் கையூட்டு பெறாமல் நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என்றார்.தொடர்ந்து கீழ்வேளூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

அதனை தொடர்ந்து வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு பெரும் நிகழ்வில் பங்கேற்று பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார் இந்நிகழ்வுகளில் மாவட்ட வருவாய் அலுவலர் பேபி, நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ்சிங்,முதுநிலை மண்டல மேலாளர் சிவப்பிரியா வட்டாட்சியர் ரமேஷ் வட்டார ஆத்மா குழு தலைவர்கள் கோவிந்தராஜன் , வேளாங்கண்ணி பேரூராட்சி தலைவர் டயானாா சர்மிளர, மற்றும் கீழையூர், கீழ்வேளூர் ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள் உள்ளிட்ட அரசு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்

Tags

Next Story