லாரி ஓட்டுநருக்கு ஏற்பட்ட சோகம்

லாரி ஓட்டுநருக்கு ஏற்பட்ட சோகம்

பலி

சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டத்திற்குட்பட்ட தேவூர் அருகே லாரி மீது ஏறி கரும்பு லோடு ஏற்றி கொண்டிருந்த ஓட்டுநர் மீது உயர் மின்னழுத்த மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் குறித்து தேவூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டம், குமராபாளையம் வட்டம், ஓடப்பள்ளி அக்ரஹாரம், சாலை தெரு பகுதியைச் சேர்ந்த லாரி ஓட்டுனர் ராமர் (52). இவர் சங்ககிரி வட்டம், காவேரிப்பட்டி அக்ரஹாரம் கிராமம், சின்ன மாரியம்மன் கோயில் பகுதியில் தனியாருக்கு சொந்தமான விவசாய தோட்டத்தில் அறுவடை செய்யப்பட்ட கரும்புகளை லாரியில் லோடு ஏற்றி கொண்டிருந்தபோது தலைக்கு மேலே சென்ற மின் கம்பியில் ஓட்டுனரின் தலை உரசியதில் மின்சாரம் தாக்கி பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து தகவலின் பேரில் விரைந்து வந்த தேவூர் போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த பின்னர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Tags

Next Story