அனுமதியின்றி கேரளாவிற்கு எம் சாண்ட் கடத்த முயன்ற லாரி பறிமுதல்

அனுமதியின்றி கேரளாவிற்கு எம் சாண்ட் கடத்த முயன்ற லாரி பறிமுதல்

கொல்லங்கோடு அருகே அனுமதி இன்றி கேரளாவிற்கு எம் சாண்ட் கடத்த முயன்ற லாரியை பறிமுதல் செய்தனர்.


கொல்லங்கோடு அருகே அனுமதி இன்றி கேரளாவிற்கு எம் சாண்ட் கடத்த முயன்ற லாரியை பறிமுதல் செய்தனர்.
கொல்லங்கோடு அடுத்த சூழால் சோதனை சாவடியில் போலீசார் சோதனையில் பட்டிருந்தனர். அப்போது எம்.சாண்ட் ஏற்றிக்கொண்டு ஒரு டாரஸ் லாரி சூழாலில் இருந்து களியக்காவிளையை நோக்கி திரும்பியது. அப்போது பணியில் இருந்த சிறப்பு போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் டாரஸ் லாரியை தடுத்து நிறுத்தி சோதனை செய்தார். அப்போது பாத்திமாநகர் பகுதிக்கு ஜல்லிகள் கொண்டு வந்ததற்கான அனுமதி சீட்டு தான்இருந்தது. இதையடுத்து டாரஸ் லாரி ஓட்டி வந்த சுஜின் என்பவர் லாரியை நிறுத்தி விட்டு தப்பி ஓடிவிட்டார். பின்னர் போலீசார் லாரியை கொல்லங்கோடு போலீஸ் நிலையத்தில் கொண்டு வந்து விசாரணை நடத்தினர். அப்போது லாரியில் எம்.சாண்ட் ஏற்றிக்கொண்டு கேரளாவுக்கு கடத்த இருந்தது தெரியவந்தது. இதையடுத்து கொல்லங்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story