வியாபாரத்தில் நஷ்டம்: வியாபாரி தற்கொலை!!

வியாபாரத்தில் நஷ்டம்: வியாபாரி தற்கொலை!!

தற்கொலை

சாத்தான்குளம் அருகே மளிகை கடை வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் வியாபாரி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே மளிகை கடை வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் வியாபாரி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகேயுள்ள நெடுங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் அந்தோணி ஜெயபால் மகன் அந்தோணி ஆசிர் லாரன்ஸ் (39). இவர் அப்பகுதியில்கடந்த 4 ஆண்டுகளாக மளிகை கடை நடத்தி வந்தார். வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டு வந்ததால் அவர் மனமுடைந்த காணப்பட்டாராம். இந்நிலையில் நேற்று அவர் தனது வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சாத்தான்குளம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஏசு ராஜசேகரன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags

Next Story