அனுமதி இன்றி லாட்டரி சீட்டு விற்றவர் கைது

அனுமதி இன்றி லாட்டரி சீட்டு விற்றவர் கைது

அனுமதி இன்றி லாட்டரி சீட்டு விற்றவர் கைது

புதுக்கோட்டை மாவட்டம், புளிச்சங்காடு கைகாட்டி பகுதியில் அனுமதி இன்றி லாட்டரி சீட்டு விற்றவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
வடகாடு அருகே புளிச்சங்காடு கைகாட்டி பகுதிகளில் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்வதாக, மாவட்ட தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இத்தகவலின் பேரில் நேற்று சிறப்பு தனிப்படை போலீசார் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்குள்ள ஒரு கடையில் வைத்து லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்த புளிச்சங்காடு பகுதியை சேர்ந்த பன்னீர் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

Tags

Next Story