போலீஸ் நிலையத்தில் திருமணம் செய்த காதல் ஜோடி

போலீஸ் நிலையத்தில் திருமணம் செய்த காதல் ஜோடி

திண்டுக்கல் போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி திருமணம் செய்து கொண்டனர்.


திண்டுக்கல் போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி திருமணம் செய்து கொண்டனர்.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே கொக்குபட்டியை சேர்ந்தவர் அருண்பாண்டி (வயது21). இவர் பெயிண்டிங் காண்டிராக்ட் தொழில் செய்து வருகிறார். இவருக்கும் அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள ரெட்டிசந்தூர் பகுதியை சேர்ந்த பிரியதர்ஷினி (20) என்பவருக்கும் இன்ஸ்டா கிராமம் மூலம் பழக்கம் ஏற்பட்டது. பிரியதர்ஷினி நர்சிங் கல்லூரியில் படித்து வருகிறார்.நாளடைவில் இது காதலாக மாறி கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். 2 பேரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பெற்றோர் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என கருதினர். இதனால் அவர்கள் நிலக்கோட்டை அனைத்து மகளிர் போலீசில் தஞ்சம் அடைந்தனர். போலீசார் இருவரின் பெற்றோரையும் வரவழைத்து இருவரும் மேஜர் என்பதால் அவர்கள் விருப்பபடி செல்லலாம் என அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர்.

Tags

Next Story