விஷமருந்திய காதல் ஜோடி உயிரிழப்பு

விஷமருந்திய காதல் ஜோடி உயிரிழப்பு

தற்கொலை 

கும்பகோணம் அருகே விஷம் அருந்திய காதல் ஜோடி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தஞ்சாவூரில் விஷமருந்திய காதல் ஜோடி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இருவரும் உயிரிழந்தனர்.

கும்பகோணம் வட்டத்துக்கு உள்பட்ட பிளஸ் 2 முடித்த 17 வயது சிறுமியும், கும்பகோணம் அருகே ஏராகரம் மூப்பக்கோயிலைச் சேர்ந்த கோவிந்தராஜ் மகன் அஜய் (22) என்பவரும் காதலித்து வந்தனர். இருவரும் திருச்சிக்கு மார்ச் 25 ஆம் தேதி சென்று திருமணம் செய்து கொண்டு, அங்கேயே தங்கினர். பின்னர், இருவரும் தங்களது வீட்டுக்குச் சென்றால், பெற்றோர்கள் பிரித்து விடுவர் என்பதால், தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தனர். இதன்படி இருவரும் தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையப் பகுதிக்கு ஏப்ரல் 1 ஆம் தேதி வந்து எலி பேஸ்டை வாங்கி சாப்பிட்டு, தனியார் தங்கும் விடுதியில் தங்கினர்.

பின்னர், இருவரும் தங்களது பெற்றோர்களிடம் கைப்பேசி மூலம் எலி பேஸ்ட் சாப்பிட்டுவிட்டதாக ஏப்ரல் 2 ஆம் தேதி கூறிவிட்டு, கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சேர்ந்தனர். பின்னர் இருவரும் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

இவர்களில் அஜய் வெள்ளிக்கிழமையும், சிறுமி சனிக்கிழமையும் உயிரிழந்தனர். இது குறித்து தஞ்சாவூர் மேற்கு காவல் நிலையத்தினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.

Tags

Next Story