போதைக்கு எதிராக களம் இறங்கிய கீழ்பாதி கிராம இளைஞர்கள்

போதைக்கு எதிராக களம் இறங்கிய கீழ்பாதி கிராம இளைஞர்கள்

போஸ்டர் ஒட்டிய இளைஞர்கள்

போதை பொருள் விற்பனை செய்யத் தடை, போதைப் பொருள் விற்பனைக்கு துணை போவது பாவம்: கிராமம் முழுவதும் போஸ்டர் ஓட்டிய இளைஞர்கள்.

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே பொன்னப்பூர் கீழ்பாதி கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் ஒருங்கிணைந்து, கிராமத்தில் மது உள்ளிட்ட போதை பொருட்களை பயன்படுத்தவோ, விற்பனை செய்யவோ கூடாது என ஊராட்சி மூலம் தீர்மானம் போட்டு முடிவெடுத்தனர்.

இதையடுத்து, தீர்மானத்தை நிறைவேற்றும் வகையில், "பொன்னாப்பூர் கிழக்கு கிராம எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் எந்தவித போதைப் பொருட்கள் விற்க தடை செய்யப்பட்டுள்ளது. மீறி விற்றாலோ, விற்பனைக்கு துணை போனாலோ, இந்த கிராமத்திற்கு செய்யும் துரோகம். பல குடும்பங்களின் பாவ செயலில் ஈடுபடாதீர்கள் இவன் பொன்னாப்பூர் கீழ்ப்பாதி இளைஞர்கள்" என்ற வாசகம் நிறைந்த போஸ்டர்களை பேருந்து நிறுத்தம், மளிகைக் கடைகள்,

அங்கன்வாடி மையம், ஊராட்சி மன்ற அலுவலகம் முழுவதும் ஓட்டியுள்ளனர். மேலும், மது உள்ளிட்ட போதை பொருட்களுக்கு எதிராக வீடு, வீடாகச், சென்று துண்டுப் பிரசுரங்களை வழங்கி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இது குறித்து இளைஞர்கள் கூறியதாவது: இளைஞர்கள் ஒன்றிணைந்து எங்கள் கிராமப்புறங்களில் போதைப்பொருள் விற்கவும், வாங்கவும் தடை செய்து தீர்மானம் போடப்பட்டுள்ளது.

இதற்கு பெண்கள் மத்தியில் நூறு விழுக்காடு வரவேற்பு கிடைத்துள்ளது. கல்வி, வேலை வாய்ப்பு, பொருளாதாரத்தில் எங்கள் கிராமம் பின் தங்கி உள்ளதற்கு போதைப் பொருள் தான் தடையாக இருந்தது. எங்கள் ஊர் வளர்ச்சிக்காக போதைப்பொருள் பயன்படுத்தக்கூடாது விற்கக் கூடாது என முடிவெடுத்து விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறோம்" இவ்வாறு தெரிவித்தனர்.

Tags

Next Story