மருதுபாண்டியர் கல்லூரியில் மாலை சங்கமம் நிகழ்ச்சி 

மருதுபாண்டியர் கல்லூரியில் மாலை சங்கமம் நிகழ்ச்சி 
பேராசிரியருக்கு மரியாதை
மருதுபாண்டியர் கல்லூரியில் கல்லூரி பேராசிரியர்கள், குடும்பத்தினர் கலந்து கொண்ட மாலை சங்கமம் நிகழ்ச்சி நடைபெற்றது
தஞ்சாவூர் மருதுபாண்டியர் கல்வி நிறுவனங்களில் அலுவலர்கள் மற்றும் அனைத்து பணியாளர்களும் அவர்தம் குடும்ப உறுப்பினர்களும் கலந்து கொண்ட 'மாலை சங்கமம்' என்ற நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது. சென்ற ஆண்டு மாணவர் சேர்க்கையில் உறுதுணையாக இருந்த பேராசிரியர்கள் அலுவலர்களைக் கௌரவிக்கும் பொருட்டு அவர்களின் குடும்பத்தாரையும் அழைத்து இன்னிசைக் கச்சேரியும் நடத்தப்பட்டது. மருதுபாண்டியர் கல்வி நிறுவனங்களின் செயலர் மற்றும் நிர்வாகம் அறங்காவலர் கொ.மருதுபாண்டியன் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் மா.விஜயா, கல்வியியல் கல்லூரி முதல்வர் ப.சுப்பிரமணியன், துணை முதல்வர் ரா.தங்கராஜ் வாழ்த்துரை வழங்கினர். முன்னதாக அதிக அளவில் மாணவர் சேர்க்கையில் ஈடுபட்ட முதல் மூன்று நபர்களுக்கு பொன்னாடை அணிவித்து தங்க நாணயம் வழங்கப்பட்டது மேலும் மாணவர் சேர்க்கைக்கு துணை நின்ற அனைத்து பேராசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்களுக்கு பணமுடிப்பு வழங்கப்பட்டது. கல்விக் குழுமத்தை சேர்ந்த குடும்ப உறுப்பினர்கள் சுமார் 500 பேர் வரை கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி மேலாளர் இரா.கண்ணன், அனைத்து பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர்.

Tags

Next Story