திருப்புவனத்தில் சூலாயுதம் வடிவில் கேரட்

திருப்புவனத்தில் சூலாயுதம் வடிவில் கேரட்

 சூலாயுதம் வடிவில் கேரட்

திருப்புவனத்தில் சூலாயுதம் வடிவில் கேரட் இருந்ததை வேடிக்கை பார்த்து சென்ற வாடிக்கையாளர்கள்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காய்கறி மார்கெட்டில் கேரட் வியாபாரி ஒருவர் விற்பனைக்காக கொண்டு வந்த கேரட் மூடையில் இரண்டு கேரட்கள் சூலாயுதம் வடிவத்தை போல இருந்தது பார்வையாளர்களை கவர்ந்துள்ளது. கிராமப்புற கோயில்களில் சன்னதிக்கு முன் சூலாயுதம் வைத்திருப்பது வழக்கம். தற்போது மாசி மாத பிறப்பை முன்னிட்டு கோயில்களில் திருவிழாக்கள் தொடங்கியுள்ளன. இந்த நேரத்தில் இன்று திருப்புவனத்தில் காய்கறி மார்கெட்டில் சூலாயுத வடிவத்தில் இரண்டு கேரட்கள் வந்திருப்பது பக்தர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. காய்கறிகள் ஏராளமாக விற்பனைக்கு வந்திருந்த நிலையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த இரண்டு கேரட்கள் வித்தியாசமாக இருந்ததால் அதனை பார்வையாளர்கள் ரசித்து சென்றனர்.

Tags

Next Story