தம்மம்பட்டி சிவன் கோயிலில் மடப்பள்ளிகட்ட பூமிபூஜை

தம்மம்பட்டி சிவன் கோயிலில் மடப்பள்ளிகட்ட பூமிபூஜை
பூமிபூஜை
சேலம் மாவட்டம் கெங்கவல்லி வட்டம் தம்மம்பட்டி சிவன் கோயிலில் 108 தம்பதிகள் பங்கேற்ற மடப்பள்ளி அறைக்கட்டுவதற்கான பூமிபூஜை நடைபெற்றது.
சேலம் மாவட்டம், தம்மம்பட்டி ஸ்ரீகாசி விசாலாட்சி உடனுறை காசி விஸ்வநாதர் கோயிலில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக கோயிலில் மடப்பள்ளி அறை கட்டுவதற்கான பூமிபூஜை திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் 108 தம்பதிகள் பங்கேற்றனர்; அனைவருக்கும் திருப்பணிக் குழு சார்பில் பாதபூஜை செய்யப்பட்டது. தம்பதிகள் அனைவரும் விளக்குகள் ஏற்றி வழிபட்டனர். அத்துடன் தம்பதிகள் அனைவரும் சேர்ந்து ரூ. 27,707 பணத்தை மடப்பள்ளி அறை கட்டுவதற்கென நன்கொடையாக வழங்கினர்.

Tags

Next Story