இஸ்லாமியர்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட மதுராந்தகம் எம்எல்ஏ !

இஸ்லாமியர்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட மதுராந்தகம் எம்எல்ஏ !

வாக்கு சேகரிப்பு

மதுராந்தகம் எம்.எல்.ஏ இஸ்லாமியர்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் காஞ்சிபுரம் தனி தொகுதிக்கு போட்டியிடும் அதிமுக வேட்பாளர் பெரும்பாக்கம் ராஜசேகர் அவர்களை ஆதரித்து, செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி,அச்சிறுப்பாக்கம் பேரூராட்சி சார்பாக அச்சிறுப்பாக்கம் பேரூராட்சியில் உள்ள பள்ளிவாசல் பகுதிகளில் தொழுகையை முடித்து வரும் இஸ்லாமியர்களிடம் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு, புரட்சித் தலைவி அம்மா ஆட்சிகாலத்தில் நிறைவேற்ற பட்ட நலத்திட்டங்கள் மற்றும் திமுகவின் பொய் வாக்குறுதிகளை எடுத்துக் கூறி பொதுமக்களிடம் மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல் வாக்கு சேகரித்தார்.. இதில் அச்சிறுப்பாக்கம் பேரூர் கழக செயலாளர் A.E.முருகதாஸ், மற்றும் SDPI கூட்டணி கழக நிர்வாகிகள், தே.மு.தி.க கூட்டணி கழக நிர்வாகிகள், பேரூர் மன்ற உறுப்பினர்கள், பேரூர் கிளை கழக நிர்வாகிகள், மகளிர் அணி நிர்வாகிகள், கூட்டடனி கழக நிர்வாகிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர்.

Tags

Next Story