மதுராந்தகம்: பைக் திருட்டில் ஈடுபட்டவர்கள் கைது

மதுராந்தகம்: பைக் திருட்டில் ஈடுபட்டவர்கள் கைது
கைது
மதுராந்தகம் அருகே பைக் திருட்டில் ஈடுபட்ட சிறுவன் உட்பட 3 பேரை கைது செய்த போலீசார் 13 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

மதுராந்தகம் அருகே சூனாம்பேடு பகுதியில் கடந்த வாரம் கடை எதிரே நிறுத்தப்பட்டு இருந்த இருசக்கர வாகனம் காணாமல்போனது குறித்து சூனாம்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த சி. சி. டி. வி. , கேமரா காட்சிகள் மூலமாக திருடர்களை தேடி வந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு சூனாம்பேடு போலீசார் புதுப்பட்டு கிராமத்தில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அந்த வழியாக ஒரே பைக்கில் வந்த மூன்று இளைஞர்களை மடக்கி விசாரணை செய்ததில், மூவரும் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் , மூவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை செய்தனர், இதில் சூணாம்பேடு பகுதியை சேர்ந்த ஆலி என்கிற அஜித் குமார் 19 ; ஆலத்துார் கிராமத்தை சேர்ந்த திலீப் என்கிற புறா ஆனந்த் 22;வெள்ளகொண்ட அகரம் கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுவன் ஆகிய மூவரும் சேர்ந்து அச்சிறுப்பாக்கம்,ஒலக்கூர், மரக்காணம்,பாண்டிச்சேரி,திண்டிவனம், பிரம்மதேசம் போன்ற பகுதிகளில் தொடர்ந்து இரு சக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு வந்தது விசாரணை தெரியவந்தது.

இதையடுத்து வழக்குப்பதிவு செய்து அவர்களிடமிருந்து 13 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன, மூவரையும் செய்யூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அஜித்குமார் மற்றும் திலீப் ஆகிய இருவரை மதுராந்தகம் சிறையிலும் , 17 வயதுடைய சிறுவனை செங்கல்பட்டு சிறார் சீர்திருத்தப் பள்ளியிலும் அடைத்தனர்.

Tags

Next Story