மதுரபாஷினி அம்பாள் சமேத கட்கபுரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்

மதுரபாஷினி அம்பாள் சமேத கட்கபுரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்

நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே குருக்கத்தியில் மதுரபாஷினி அம்பாள் சமேத கட்கபுரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே குருக்கத்தியில் மதுரபாஷினி அம்பாள் சமேத கட்கபுரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே குருக்கத்தியில் மதுரபாஷினி அம்பாள் சமேத கட்கபுரீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் சிதிலமடைந்திருந்த 75 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மீண்டும் புனரமைக்கப்பட்டு திருப்பணிகள் நடைபெற்றது. இக்கோவிலில் குடமுழுக்கு நிகழ்ச்சி கடந்த புதன்கிழமை அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து மகா பூர்ணாஹுதி, கோ பூஜை, தீப பூஜை உள்ளிட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.

நேற்று காலை நான்காம் கால யாகசாலை பூ ** ஜைகள் நிறைவடைந்து கடம் புறப்பாடு நடைபெற்றது. சிவாச்சாரியார்கள் புனித நீர் அடங்கிய குடங்களை கோவிலை சுற்றி எடுத்து வந்து விமான கலசத்தில் ஊற்றி குடமுழுக்கு நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பரிவார தெய்வங்களுக்கும் குடமுழுக்கு நடைபெற்றது. பின்னர் சாமிக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது . இதில் நாகை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ராணி, கோவில் செயல் அலுவலர் பூமிநாதன், விழா குழுவினர் கிராமமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story