மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வரும் 28ல் நடை அடைப்பு

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வரும் 28ல் நடை அடைப்பு

 திருப்பரங்குன்றம் சுப்பிரணியசுவாமி திருக்கல்யாண வைபவத்தையொட்டி, மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வரும் 28ம் தேதி நடை அடைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

திருப்பரங்குன்றம் சுப்பிரணியசுவாமி திருக்கல்யாண வைபவத்தையொட்டி, மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வரும் 28ம் தேதி நடை அடைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மீனாட்சி அம்மன் கோவிலில் மார்ச் 28-ல் நடை அடைப்பு திருப்பரங்குன்றம் சுப்பிரணியசுவாமி திருக்கல்யாண வைபவத்தையொட்டி வருகிற 28-ஆம் தேதி மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் நடைசாத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

இதுதொடா்பாக மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் திருக்கல்யாண உற்சவம் வருகிற 28-ஆம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி அன்றைய தினம் அதிகாலை 4 மணிக்கு அருள்மிகு மீனாட்சியம்மன், சுந்தரேசுவரா் பஞ்சமூா்த்திகளுடன், மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் இருந்து புறப்பாடாகி, திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோயிலுக்குச் சென்று திருக்கல்யாண உற்சவத்தில் எழுந்தருளுகின்றனா்.

மீண்டும் அங்கிருந்து இரவு புறப்பாடாகி நள்ளிரவில் மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் வந்து சோத்தியாவாா்கள். எனவே வருகிற 28-ஆம் தேதி அதிகாலை 4 மணி முதல் சுவாமி, அம்மன் நள்ளிரவில் மீண்டும் கோயில் வந்து சோத்தியாகும் வரை மதுரை மீனாட்சிசுந்தரேசுவரா் கோயில் நடை சாத்தப்பட்டிருக்கும் என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

Tags

Next Story