மதுரை : செல்போன் டவரில் ஏறி மிரட்டல் விடுத்த போதை ஆசாமியால் பரபரப்பு..!

மதுரை : செல்போன் டவரில் ஏறி மிரட்டல் விடுத்த போதை ஆசாமியால் பரபரப்பு..!
செல்போன் டவரில் ஏறி போதை ஆசாமி தற்கொலை மிரட்டல்
மதுரை உசிலம்பட்டி அருகே மேலத்திருமாணிக்கத்தில் 100அடி உயர செல்போன் டவர் மீது ஏறி போதை ஆசாமி.தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

மதுரை மாவட்டம் எழுமலை அருகே டி.ராமநாதபுரம் காவல் சரகத்தைச் சேர்ந்த மேலத்திருமாணிக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் சொக்கர் மகன் அழகர்சாமி( வயது47).கூலித் தொழிலாளியான இவர், மதுப்பழக்கத்திற்கு அடிமையானவர் எனக் கூறப்படுகிறது.இந்நிலையில் இன்று மதியம் குடித்து விட்டு வீட்டிற்குச் சென்று மனைவியுடன் அழகர்சாமி தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது, மனைவி திட்டியதால் போதையில் வீட்டை விட்டு வெளியேறிய அவர், கிராமத்தின் அருகே உள்ள 100 அடி உயரமுள்ள செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இதனைக் கண்ட அந்த வழியாகச் சென்ற பொதுமக்கள், டி.ராமநாதபுரம் போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த டி.கல்லுபட்டி குருசாமி தலைமையிலான தீயணைப்புத் துறையினர் உதவியுடன் காவல்துறையினர் போதை ஆசாமியை கீழே இறக்க முயற்சித்தனர்.ஆனால் அழகர்சாமி போதையில் கீழே இறங்கி வர மறுத்ததால் மேலே ஏறி போராடி கயிறு கட்டி அவரை பத்திரமாக கீழே இறக்கினர். இந்த சம்பவம் தொடர்பாக டி.ராமநாதபுரம் போலிசார் வழக்குப்பதிவு செய்து, போதை ஆசாமிக்கு எச்சரிக்கை விடுத்து அனுப்பி வைத்தனர்.

Tags

Next Story